இயக்குனர் மீரா மஹதி இயக்கத்தில் ஃபேண்டஸி காமெடி படமாக உருவாகியுள்ளன டபுள்
டக்கர் திரைப்படம். இப்படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
![](https://seithimalar.com/wp-content/uploads/2024/02/miskin.jpg)
இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது:
“விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தீரஜ் அழைத்ததால் தவிர்க்க முடியாமல் இங்கு வந்துள்ளேன். தீரன் இதுவரை 500 பேரையாவது காப்பாற்றி இருப்பார். மிகப்பெரிய இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர் இவர். மருத்துவராக இருந்தாலும் கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பவர். மருத்துவருக்கும் கலைஞர்களுக்கும் வித்தியாசம் இல்லை. மருத்துவர் இதயத்தை பிளந்து பிரச்னை இருந்தால் காப்பாற்றுவார்கள். நல்ல கலைஞரும் இதயத்தை திறக்காமல் திறந்து அதில் உள்ள ரணங்களை ஆற்றுபவர்கள்.
ஆண்கள் அழுவது அழகானது. உதவி இயக்குனர்கள் அல்லது சினிமாவிற்கு இயக்குனராக வருபவர்கள் எதாவது ஒரு படத்தில் வேலை பாருங்கள். ஒரு நடிகை பற்றி அவ்வளவு சுலபமாக பேசிவிடாதீர்கள். இரண்டு முறைதான் த்ரிஷாவை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர் எளிமையான பெண். நடிகைக்கும் மேல் அவர் ஒரு தாய், ஒரு பெண். ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள். நம்ம வீட்டு பெண்ணை பற்றி பேச விடுவோமா? நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து பேசிடாதீர்கள்.
வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய கஷ்டப்பட்டுக்கொண்டு எல்லோரும் அதனை நாகரீகமாக கடந்து செல்ல வேண்டும். ஒரு பெண்ணை அழவைப்பவன் ஆண்மகனே இல்லை. ஒரு காலத்தில் சாட்டிலைட் இருந்தது. இப்போது ஓடிடி வந்துள்ளது. ஆனால் படங்கள் நம்மால் கொடுக்க முடியவில்லை. தியேட்டருக்கு மக்கள் வரமாட்டேன் என்கிறார்கள். ரொம்ப சவாலாக உள்ளது. ஆனால் இந்த மோதல் தான் நல்ல படத்தை கொடுக்க வேண்டிய உத்வேகத்தை கொடுக்கின்றது” என தெரிவித்தார்.