பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் இறுதி நிகழ்வு வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறுகின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார். இந்த விழாவை முடித்து அதன் பிறகு ஹெலிகாப்டரில் இருந்து மதுரை செல்கிறார்.
![](https://seithimalar.com/wp-content/uploads/2024/02/bjp-5.jpg)
இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் சிறு, குறு, நடுத்தர வர்த்தக தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளும் டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு மதுரையில் தங்கும் மோடி 28 ஆம் தேதி காலை தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.