கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை – இரண்டாவது நாளாக தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மருதமலை பகுதியில் பெண் யானை ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிக்கப்பட்ட பெண் யானை 6 நாட்கள் சிகிச்சைக்கு பின் வனத்துறையினர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். அந்த சிகிச்சையின் போது பெண் யானை அருகே நான்கு மாத குட்டியானை ஒன்று இருந்தது. இந்நிலையில் தாயை விட்டு 4 மாத குட்டி யானை தனியாக பிரிந்த்தால்,வனத்துறையினர் குட்டியை மீட்டு தாயுடன் சேர்க்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர், ஆனால் இரவு வரை சேர்க்க முடியாததால் இரண்டாவது நாளாக குட்டியை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.