சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் வியாழக்கிழமை சந்தை அருகே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா பெட்டணங்கள் விற்பனை செய்வதாக காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன, அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் 25 சிறு சிறு பொட்டலங்களாக ஒரு பொட்டணம் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பொழுது கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்பு விசாரணையில் அந்த இளைஞர் காரைக்குடி அண்ணா நகர் வள்ளுவர் தெருவை சேர்ந்த மணிமுத்து என தெரியவந்தது. அவரிடம் இருந்த 25 கஞ்சா சிறு பொட்டலங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவனை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.