கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறைக்கு உதவியாக பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், அவர் வழக்கமாக அரசு மருத்துவமனை அருகில் நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபொழுது தனது ஆம்புலன்ஸ் வாகனம் காணாமல் போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் ஆம்புலன்ஸ் திருடர்களை தேடி வருகின்றனர்.
மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனம் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.