தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டிங் இசையமைப்பாளராக இருப்பவர் தான் அனிருத். தொடர்ச்சியாக தமிழில் முன்னனி கதாநாயகர்களின் படத்திற்க்கு சூப்பர் ஹிட் பாடல்களை இவர் வழங்கி வருகிறார் . இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது . தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் இவர் பிரபலமாகி வருகிறார் .
இந்நிலையில் சினிமாவில் இசையமைப்பது மட்டுமின்றி அனிருத் உலகம் முழுக்க பல நாடுகளில் பயணித்து ரசிகர்களுக்காக இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். ரசிகர்கள் மத்தியில் இவரது கச்சேரிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது .
இந்நிலையில் சமீபத்தில் நடந்த கச்சேரி ஒன்றில் அனிருத் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது ரசிகர்கள் அவர் மீது பொருட்களை தூக்கி வீசி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அனிருத் இதை கூலாக எடுத்துக்கொண்டு அந்த பொருட்களை கையால் பிடிக்க முயற்சித்து இருக்கிறார். பொருட்களை வீசிய ரசிகர்களின் செயலை நெட்டிசன்கள் தற்போது கண்டித்து வருகின்றனர்