விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தமிழக துணை முதலமைச்சராக வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, உலக சரித்திரத்தில் நரேந்திர மோடி ஜவர்ஹலால் நேரு சாதனையை முறியடித்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக உள்ளார். பல்வேறு திட்டங்களை கொடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நம் நாட்டின் மகிமையும், பெருமையும் உயர்த்தி விஷ்வ குருவாக மோடி இருந்து வருகிறார் என தெரிவித்த அவர்.
தமிழகத்தில் பாஜக நான்கு மடங்கு அதிகமாக வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டும் என கருத்து தெரிவித்த அவர், இந்த தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியா கூட்டணி மொத்தமாக 234 தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியினர் பாஜக தோற்றுவிட்டது என சந்தோஷப்படுகிறார்கள்.இதனால் இந்த தேர்தல் அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தவர் அவர்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக திமுக எம்பிகள் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர். எம்ஜிஆர் கருணாநிதி போன்றவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என கருத்து தெரிவித்த அவர், பிஜேபிக்கு தனி பெரும்பான்மை இருந்தும் நாங்கள் கூட்டணியை ஆட்சியத்தால் நடத்திக் கொண்டிருந்தோம்.
கூட்டணி ஆட்சியால் திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் இருக்காது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக, சிபிஐ, அமலாக்கத்துறை வைத்து மிரட்டி உள்ளது. என மக்கள் நினைத்திருந்தால் டெல்லியில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்காது என தெரிவித்த அவர், கூட்டணி கட்சிகள் இருந்தபோது NIA, CAA போன்ற சட்டங்களை அமல்படுத்தினோம் அதற்கு திமுக அதிமுக ஆதரவு கொடுத்தது. கூட்டணி ஆட்சியால் திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் ஏதும் இருக்காது என கருத்து தெரிவித்த அவர், தமிழகம் மேற்கு வங்காளம், உத்திர பிரதேசத்தில் வாக்கு ஜிகாத் நடத்தியுள்ளார்கள் என குற்றம் சாட்டிய அவர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் விரைவில் தமிழக துணை முதலமைச்சர் பதவி திருமாவளவனுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் யாகம் நடத்தியதால், தமிழகத்தில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.