காஷ்மீர் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து தஞ்சாவூரில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும், காஷ்மீர் மக்களை கொச்சைப்படுத்தக் கூடாது, நடிகர் கமலஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.
அப்போது திடீரென அங்கே வந்த நிர்வாகிகள் சிலர் நடிகர் கமலஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் உருவ பொம்மைகளை தனித்தனியாக தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது அங்கு இருந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர், இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது