நடிகை திரிஷா குறித்த அவதூறு பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் சேலத்தில் திரைப்பட நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் நடிகர் பெஞ்சமின் பேட்டியில் அவர் கூறியதாவது
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று சொல்கிறார்கள் நடிகையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி ஒரு தனிப்பட்ட நபரை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது அதுவும் ஒரு புகழ் பெற்ற திரைப்பட நடிகையை விமர்சிப்பது கண்டனத்திற்குரியது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எங்களுடைய தரப்பில் கட்டாயம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
தமிழ் சினிமா முன்பு போல இல்லை தற்போது சினிமா நடிகர்களுக்கு எங்கும் மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை, முன்பு நடிகர் நடிகைகளுக்கு அவ்வளவு மரியாதை இருந்தது சிறிதளவு கூட மரியாதை இல்லாத துறையாக திரைத்துறை மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் நடிகை கிடைப்பது அவ்வளவு கடினமான இருக்கும் இந்த காலகட்டத்தில் நடிகை திரிஷா குறித்து பேசி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
மிகவும் நல்ல நடிகை அனைவரையும் மதிக்கத்தக்க நடிகை சிறிய அளவிலான நடிகர்கள் பெரிய அளவிலான நடிகர்கள் என்று பாரபட்சம் பார்க்காத ஒரு நல்ல நடிகை அவரை இது போன்ற நபரை இழிவு படுத்திய செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்றார்.